தரம் 5 புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் குறித்த முக்கிய அறிவித்தல்!

நாட்டில் மீண்டும் கொரோனாத் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். இதன்படி, பரீட்சைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் மாற்றம் செய்வது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. அதேவேளை, குறித்த பரீட்சைகளை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.